Header Ads

  • சற்று முன்

    பொங்கலுக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமனம் செய்வோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு



    சென்னை: தொழிற்சங்கங்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்றும் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமிப்போம் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். 2.57 சதவீதம் ஊதிய உயர்வு கோரி தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுநர்கள் 5-ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியலும் நடத்தப்படுகிறது. இதனால் பேருந்துகள் போதிய அளவு இயங்கவில்லை. குறைந்த அளவிலான பேருந்துகளை அண்ணா தொழிற்சங்கத்தினரும், தற்காலிக ஓட்டுநர்களும், ஆட்டோ டிரைவர்களும் இயக்கி வருகின்றனர். இதனால் மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் செய்கின்றனர்.
    தலைமை செயலகத்தில்... 
    சென்னை சேப்பாக்கத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியபோது அரசு கவுரவம் பார்க்காமல் பேச்சுவார்தை நடத்த வேண்டும் என்று கூறினர். இதைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிதித் துறை செயலாளர் சண்முகம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். 
    15 ஆண்டுகால பிரச்சினை 
    தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் தவறாக வழி நடத்துகிறது.தொழிலாளர்களின் ரூ.5000 கோடியை திரும்ப தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 15 ஆண்டுகால பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு காண நிர்பந்திக்கிறார்கள்.
    ஆட்களை நியமனம் செய்வோம் 
    நாங்கள் இந்த ஆண்டு 2.44 சதவீதத்துக்கும், 2.57 சதவீதத்துக்கும் என்ன பெரிய வித்தியாசம் வந்துவிட போகிறது. பொங்கலுக்குள் அவர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை தர முயற்சிக்கிறோம். எனவே பணிக்கு திரும்புவார்கள் என நம்புகிறேன். அவ்வாறு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமனம் செய்வோம்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad