இந்து முன்னணி அமைபினர்களுக்கு எதிராக வி.சி.கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலூக்கா வெள்ளை நாய்க்கனேரி கிராமத்தில் அமைந்துள்ள இசிஐ கிருஸ்துவ ஆலயத்தை இந்து முன்னணி அமைப்பினர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு துண்டு பிரசுரம் மூலம் இன்று கிருஸ்துவ ஆலயத்தை மூட மனு கொடுத்தும் கண்டு கொள்ளாத வருவாய் துறையை கண்டித்து ஊர்வலமாக சென்று கிருஸ்துவ ஆலயத்தை முற்றுகையிட இருந்தனர் இதை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாணியம்பாடி தொகுதி செயலாளர் கோவிந்தன் தலைமை யில் 100க்கும் மேற்பட்டோர் ஆலயத்தின் முன்பு கிருஸ்துவர்களுக்கு ஆதரவாக குவிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.இதில் தெற்கு மாவட்ட துணை செயலாளர் கலா நாட்றம்பள்ளி வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக் துணை செயலாளர் அன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை