எட்டயபுரத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் வாலிபர் சடலம் மீட்பு
எட்டயபுரம் அருகே தூத்துக்குடி – மதுரை சாலையில் வெம்பூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் அருகே சுமார் 25 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்த அக்கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். உடனே கிராமமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் . மாசார்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து இறந்து கிடந்த வாலிபர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர், இந்த கொலையா ? எதற்கு நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை