Header Ads

  • சற்று முன்

    எட்டயபுரத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் வாலிபர் சடலம் மீட்பு

    எட்டயபுரம்  அருகே தூத்துக்குடி – மதுரை சாலையில் வெம்பூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் அருகே சுமார் 25 வயது  மதிக்கதக்க வாலிபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக   கிடந்ததை பார்த்த அக்கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். உடனே கிராமமக்கள்   காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் . மாசார்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி  பிரதே பரிசோதனைக்காக  விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து இறந்து கிடந்த வாலிபர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர், இந்த கொலையா ?  எதற்கு நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad