Header Ads

  • சற்று முன்

    K-9 காவல் நிலையத்தை தொன்போஸ்கோ பள்ளி பெற்றோர்கள் முற்றுகை



    சென்னை பெரம்பூர் தொன்போஸ்கோ பள்ளியில் பத்தாம் வகுப்பு  பயிலும் மாணவன் இன்று காலை பள்ளிக்கு லேட்டாக வந்ததால் லேட்டாக வந்த மாணவர்களை பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்கள் மைதானத்தை டக்வாக் மைதானத்தை வலம் வர சொல்லி தண்டணை கொடுத்தனர். 
    லேட்டாக வந்த 25 மாணவர்களை வலம் வர சொல்லி இருக்கிறார். அப்போது நரந்திரன் என்கிற மாணவன் என்னால் முடியவில்லை என்று கதறியுள்ளான் . சில வினாடிகளில் மயங்கி விழுந்து விட்டான். உடனே ஆசிரியர்கள் அந்த மாணவனை KVT மருத்துவமணைக்கு அழைத்து சென்றனர். பிறகு அங்கிருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சென்றதும் பரிசோதித்த மருத்துவர் மாணவன் இறந்துவிட்டார் என்று கூறி அனுப்பிவிட்டனர். அதன் பிறகு பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். நரேந்திரன் தந்தை முரளி பதறி அடித்து கொண்டு வந்தார். என் மகன் காலை நன்றாகத்தான் இருந்தான் என்று கதறி அழுதார். பெற்றோர்கள் K-9  காவல் நிலயைத்தில் முற்றுகையிட்டு பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க சொல்லியும் தண்டணை வழங்கிய ஆசிரியர்களை கைது செய்ய சொல்லி போராட்டம் நடத்தி வருநிக்றனர்.  .  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad