Header Ads

  • சற்று முன்

    எட்டயபுரத்தில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்



    எட்டயபுரத்தில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சனிக்கிழமை  மாலையில் நடைபெற்றது.
    மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் எட்டயபுரம் கிளையில் நடைபெற்ற முகாமுக்கு வங்கி மேலாளர் திலகர் தலைமை வகித்தார். உதவி மேலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நபார்டு வங்கி இணைந்து நடத்திய பயிற்சி முகாமில் மகளிர் சுய உதவிக்குழு -றுப்பினர்களுக்கு பதிவேடு பராமரித்தல், ஆவண பதிவு முறைகள், சுயஉதவி குழுக்களின் இன்றைய நிலைப்பாடுகள், பயன்கள், வரவு&செலவு நடைமுறைகள், நபார்டு வங்கி உதவிகள், நலத்திட்டங்கள், சிறு தொழிலுக்கான வழிமுறைகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் மகளிர் திட்டம் பயிற்றுனர்கள் பி. பொன்னுத்தாய், உமையபார்வதி மற்றும் வங்கி ஊழியர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
                                                                                                                      

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad