Header Ads

  • சற்று முன்

    இறந்தவர் உடலை மாற்றி கொடுத்த மதுரை அரசு மருத்துவமணையில் பரபரப்பு



    மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தவர் உடலை மாற்றி கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் கொத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவரின் மனைவி கற்பகசெல்வி தற்கொலைக்கு முயன்று தீ காயங்களுடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனயில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன்னின்றி உயிர் இழந்தார். 


    இதே போன்று மதுரை புது தாமரைப்பட்டியை சேர்ந்த அன்னலட்சுமி சாலை விபத்தில் உயிர் இழந்தார். பிரேத பரிசோதனை முடிந்து அன்னலட்சுமி உறவினர்களிடம் முகத்தை முடி கொடுத்துவிட்டனர் . இறுதி சடங்கு செய்து முடித்து முகத்தில் உள்ள துணியை விலக்கிய போது அது அன்னலட்சுமியின் உடல் இல்லை என்பது தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்தனர் .


    உடனே அரசு மருத்துவமனைக்கு வந்து முற்றுகையிட்டனர் .அன்னலட்சுமியின் உடலுக்கு பதிலாக தற்கொலை செய்துகொண்ட தீ காயங்களுடன் உயிர்  இழந்த கற்பகசெல்வி உடல் என்பது தெரியவந்தது .
    அப்போது பொது மக்களிடம் பேசிய காவல் அதிகாரி தவறு செய்வது மனித இயல்பு . பேசாம உடலை வாங்கி கொண்டு போயா . இப்போ வெட்டி பஞ்சாயத்து செய்யபோரியா என்று கூறியது பாதிக்கப்பட்ட உறவினர்கள் கடும் கொந்தளிப்பு அடைந்தனர் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad