Header Ads

  • சற்று முன்

    ரசிகர்களை சந்திக்கும் ரஜினி அரசியல் களத்தில் இறங்குவாரா ?


    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களுடன் சந்தித்து வருகிறார். காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதத்தில் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது 2-வது கட்டமாக புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வை சமீபத்தில் அவரது தலைமை ரசிகர் நற்பணி மன்றம் மூலம் அறிவித்தார். இந்த சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று முதல் 31ஆம் தேதி வரை நடக்கிறது. 



    காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து, அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். நாளை திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்கள், 28-ம் தேதி மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் மாவட்ட ரசிகர்கள், 29ஆம் தேதி கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு மாவட்ட ரசிகர்கள், 30, 31 தேதிகளில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ரசிகர்களை சந்திக்க உள்ளார்.



    இதில் பங்கேற்க ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் குறித்து வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad