Header Ads

  • சற்று முன்

    காவல் ஆணையர் அலுவலகத்தில் சக்கரம் இல்லா வீல் சேர் ஊனமுற்றோர், முதியவர்கள் தவிப்பு

    சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வீல் சேர் இல்லாததால், ஊனமுற்றோர், முதியவர்கள் அவதியுறும் அவலம் நிலவுகிறது. சென்னை மேற்கு முகப்பேரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி, சொத்துப் பிரச்சனை குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிப்பதற்காக தள்ளாடி நடந்து வரும் காட்சிகள் தான் இவை.



    காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வருபவர்கள் முதலில் சோதனை செய்யப்பட்டு, பின்னர் உள்ளே அனுப்பப்படுவர். வரவேற்பறைக்கு சென்ற பின்னர், பொதுமக்கள் புகார் பிரிவில் அவர்கள் மனுக்களை அளிக்க வேண்டும். அங்கு ஊனமுற்றோர் மற்றும் முதியோருக்காக, அலுவலகத்திற்கு செல்வதற்காக வீல் சேர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்த வீல் சேரில் தற்போது சக்கரமே இல்லை. இதனால் காவல் ஆணையர் அலுவலகம் வரும் முதியோரும், ஊனமுற்றோரும், அலுவலகத்துக்கு செல்ல அவதியுறும் சூழல் உள்ளது. இதை காவலர்கள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.

    வீல் சேர் பிரச்சனையை உயர் அதிகாரிகள் கவனத்திற்கும் கொண்டு செல்லவில்லை என்று புகார் எழுந்துள்ளது. பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்காக காவல் ஆணையர் அலுவலகத்தை நாடும் ஊனமுற்றோர், மற்றும் முதியோர், வீல் சேர் இல்லாததால் தள்ளாடி செல்லும் அவலம் ஒழிய, காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad