கஞ்சா கடத்தல் கும்பலை போலீசார் வளைத்து பிடித்தனர்
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குஞ்சார்வலசை தேசிய நெடுஞ்சாலை அருகே இன்று காலை மண்டபம் காவல்துறை மற்றும் கீ பிரான்ச் மற்றும் காவல்துறையின் தனிப்பிரிவு போலீசர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் நோக்கி வந்த மானசா சொகுசு கார் TN 22 CC 8667 என்ற பதிவெண் கொண்ட காரை மடக்கி பிடித்து விசாரித்த போது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரனான பதிலளித்ததனர்.
சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனையிட்ட போது காரில் இருந்த 4 மூட்டைகள் கஞ்சா இருந்ததை கண்டு பிடித்தனர் காரில் இருந்தவர்களான தொண்டியைச் சேர்ந்த நயினார் சித்திக் மற்றும் முகு சித்திக் இருவரையும் பிடித்து மண்டபம் காவல்துறையில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்
கருத்துகள் இல்லை