Header Ads

  • சற்று முன்

    ஹாசினி கொலைக் குற்றவாளி தஷ்வந்த் போலீஸிலிருந்து தப்பினார்!



    சிறுமி ஹாசினியைக் கொலை செய்தவழக்கில் ஜாமீனில் வந்த தஷ்வந்த், அவரது தாயைக் கொன்றுவிட்டு தலைமறைவானார். இந்நிலையில், நேற்று அவரை மும்பையில் கைது செய்ததாக தகவல் தெரிவித்தது காவல்துறை. இந்நிலையில், தற்போது போலீஸின் பிடியிலிருந்து தஷ்வந்த் தப்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கடந்த பிப்ரவரியில் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் தன் பெற்றோருடன் குன்றத்தூரில் வசித்து வந்தார். இந்நிலையில், செலவுக்குப் பணம் தராததால் தன் தாய் சரளாவை, இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு தஷ்வந்த் தப்பிவிட்டார் என அவரது தந்தை சேகர் போலீஸில் புகார் கொடுத்தார்.
    தமிழகத்தையே உலுக்கிய இந்தச் செய்தியைத் தொடர்ந்து போலீஸ் தனது தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு தஷ்வந்தை மும்பையில் தமிழக போலீஸார் கைது செய்தனர். தஷ்வந்தை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தமிழகம் அழைத்து வரும் வேலைகளில் போலீஸார் ஈடுபட்டனர். தற்போது, மும்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு தஷ்வந்தை திரும்ப அழைத்து வரும்போது போலீஸ் பிடியிலிருந்து தஷ்வந்த் தப்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்திலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு அழைத்து வரும்வழியில் கழிவறைக்குப் போகவேண்டும் எனக் கூறி தப்பித்திருக்கிறார் தஷ்வந்த். ஶ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் வரும் 9-ம் தேதிக்குள் ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது மும்பை நீதிமன்றம். போலீஸார் தற்போது தஷ்வந்தை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad