தொண்டி அரசு பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் ஆய்வு மேற்கொண்டார்
திருவாடானை தாலுகா தொண்டி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என எழும்பிய புகாரை அடுத்த சட்ட மன்ற உறுப்பினர் கருணாஸ் ஆய்வு மேற்கொண்டார். திருவாடானை தாலுகா தொண்டி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவிகளுக்கு குடி நீர் வசதி இல்லை கழிப்பிட வசதி இல்லை என புகார் எழும்பியதை அடுத்து திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் இந்த பள்ளியில் மாணவிகளுக்கு கழிப்பிட வசதி இல்லை, மேலும் குடி தண்ணீர் வசதி இல்லை. விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாக தெரிவித்தார். மேலும் திருவாடானை பகுதிகளில் உள்ள பள்ளிகள் அணைத்தையும் விரைவில் ஆய்வு செய்து உரிய வசதிகளை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை