ஆளுநர் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது .
ராமேஸ்வரத்திற்கு வரும் 23 ம் தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நடராஜன் நேரில் ஆய்வு நடத்தினார்.
ராம்நாத் கோவிந்த், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வரும் 23ஆம் தேதி வருகை தர உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரும் அவர், அதன் பின் மண்டபம் கேம்ப் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகிறார். தொடர்ந்து கார் மூலம் ராமேஸ்வரம் வந்து, கோவிலில் தரிசனம் செய்து விட்டு முன்னார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்திலும் மரியாதை செலுத்துகிறார். குடியரசுதலைவர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் நடராஜன் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
கருத்துகள் இல்லை