கன்னியாகுமரியை பேரிடர் மாவட்டமாக அறிவிக்ககோரி திமுகவினர் ஆர்பாட்டம் !
ஓக்கி புயலால் பாதிக்கப்பட கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க கோரி திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். கிள்ளியூர் ராஜேஷ் குமார் விலங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதராணி, நாகர்கோவில் சுரேஷ் பாபு பத்மானந்தபுரம் மனோ தங்கராஜ் குளச்சல் பிரின்ஸ் இவர்கள் நாகர்கோவிலில் ஆர்.டி. அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென திருவனத்தபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சில மணி நேரம் போக்குவரத்து பதிக்கப்பட்டது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட ஆறு எம்.எல்.ஏக்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை