தடை விதிக்க உயர் நீதி மன்றம் மறுப்பு
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆங்கில புத்தாண்டு அன்று இரவு முழுவதும் திறப்பதை தடை விதிக்க தொடரப்பட்ட வழக்கு விடுமுறை நாளிலில் சிறப்பு வழக்கறிஞர் எம். எஸ். ரமேஷ். ஜி. ஆர். சாமிநாதன் அமர்வு முன்னிலையில் விசாரிகப்பட்டது .
ஆகம சாஸ்திர படி இந்து கோவில்களில் இரவு ஒன்பது மணிக்குள் நடையை சாத்திவிட்டு பிரம்ம முகூர்த்ததில் அதிகாலை நான்கு மணிக்கு திறக்க வேண்டும் .
வைணவ கோவில்களில் வைகுண்ட ஏகாதசி அன்றும் . சைவ கோவில்களில் சிவராத்திரி அன்றும். இரவு முழுவதும் திறந்து வைப்பது வழக்கம் . ஆனால் ஆகம விதிப்படி ஆங்கில புத்தாண்டு அன்று இரவு முழுவதும் இந்து கோவில்களை திறப்பது முறையற்றது என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் முதலில் இந்து அறநிலைத் துறை பதிலளிக்க வேண்டும். வழக்கை ஜனவரி 8ஆம் தேதி ஒத்திவைத்தார். அதற்குள் இந்து அறநிலை துறை பதில் அளிக்கவேண்டும் . மேலும் இடைக் கால தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.
கருத்துகள் இல்லை