Header Ads

  • சற்று முன்

    மனைவியின் கழுத்தை நெறித்து கொன்ற கணவன்

    கோவில்பட்டி அருகேயுள்ள கடலையூரில் பேச்சியப்பன் என்பவர் அவரது மனைவி பரமேஸ்வரியை குடும்பதகராறு காரணமாக கழுத்தை நெறித்து கொலை செய்து, உடலை தோட்டப்பகுதியில் வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.



    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அம்மாள்பட்டியை சேர்ந்தவர் பேச்சியப்பன். கூலி தொழிலாளியான இவரது மனைவி பரமேஸ்வரி. பேச்சியப்பன் மது அருந்தி விட்டு வேலைக்கு செல்லாமல்  மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பேச்சியப்பன் வழக்கம் போல மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபித்துக் கொண்டு பரமேஸ்வரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள் கடலையூரில் இருக்கும் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் பேச்சியப்பன் தனது மனைவியை சமதானப்படுத்தி அழைத்து செல்ல ஊருக்கு வந்துள்ளார். அப்போது மனைவி பரமேஸ்வரி அவரது தாய் வீட்டிற்கு சொந்தமான முத்துலாபுரம் சாலையில் தோட்டத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தும், பேச்சியப்பன் அங்கு சென்று மனைவியை ஊருக்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த பேச்சியப்பன், பரமேஸ்வரி சேலையால் அவரது கழுத்தினை நெறித்து கொலை செய்து விட்டு, உடலை தோட்டாத்தில் போட்டு விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்தும் நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய பேச்சியப்பனை தேடி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண், 2பையன்கள் இருப்பது குறிப்படதக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad