Header Ads

  • சற்று முன்

    மூன்று கோடி மதிப்புள்ள ஐம்பொன் விநாயகர் சிலை மீட்பு ! கடத்தல் கும்பல் பிடிபட்டனர்



    திருவாடானை அருகே ஐம்பொன் விநாயகர் சிலையை கடத்தி விற்பனைக்காக மதுரைக்கு காரில் கடத்தி செல்வதாக  சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது .


    தகவல் அறிந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.உத்தரவின் பேரில் திருவாடானை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து திருவாடானை தொண்டி ரோட்டில் வாகன சோதனை நடத்தினர் . அப்போது அச்சங்குடியில் சாலை ஓரத்தில் நின்றிருந்த நானோ காரை சோதனையில் ஈடுபட்டபோது காரில் இருந்து இரண்டு பேர் தப்பி ஓடினர் . காரில் சோதனை செய்ததில் 13/4 அடி ஐம்பொன்னால் ஆன விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
    ஓடியவர்களை விரட்டி பிடித்து விசாரித்ததில் நாகப்பட்டினம் தங்கபாண்டியன்,வெள்ளையபுரத்தை சேர்ந்த செய்யது அப் தாகிர் , ரிஸ்வான், அம்ஜத்கான் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள் .
    சிலையின் மதிப்பு மூன்று கோடி மதிப்புள்ளதாக கருதபடுகிறது. மேலும் இந்த சிலை எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று விசாரித்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad