Header Ads

  • சற்று முன்

    திரிபுரா சிட்பண்டு நிறுவனம் மோசடி


    சிவகங்கை மாவட்டம்  காரைக்குடியில் பொது மக்களிடம் வசூலித்த பணத்தை மோசம் செய்ததாக திரிபுரா சிட்பண்டு நிதி நிறுவனம் மீது பொது மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் .



    சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த திரிபுரா சிட்பண்டு நிதி நிறுவனம் காரைக்குடியில் கிளை நிறுவனமாக செயல்பட்டுவந்தது . இந்த நிதி நிறுவனத்தை நம்பி பல திட்டங்கள் கீழ் மாதமாதம்ஆயிரகணக்கானோர்  பணம் கட்டி வந்தனர். சீட்டின் முடிவில் பணம் தராமல்  இழுத்தடித்தை  தொடர்ந்து பொது மக்கள் காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .

     இது போன்று திரிபுரா சிட் பண்டு நிறுவனத்தின் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காவல் நிலையங்களில் புகார் வந்துதுள்ளது தெரியவந்துள்ளது .




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad