Header Ads

  • சற்று முன்

    ஏரிகள் தூர்வாரப்படவில்லை எடப்பாடி அரசு கஜானாவை தூர்வாரப்பட்டுவிட்டது


    தருமபுரியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் அதிமுகவின் 46-வது ஆண்டு தொடக்க விழா பொது கூட்டம் டிடிவி தினகரன் அணி சார்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தினகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, வெகுவிரைவில் வீட்டுக்கு அனுப்பப்படுவர். இதையடுத்து எங்கள் அணி தலைமையில் புதிய ஆட்சி அமையும். இதற்கு புதிதாக வாக்காளர்களாக சேர்ந்துள்ள 50 லட்சம் இளைஞர்கள் எங்களுக்கு துணை நிற்பார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, ஏரி குளங்களை தூர்வாருவதாகக் கூறி, அரசு கஜானாவை தூர்வாரி விட்டனர் என்று தினகரன் குற்றம்சாட்டினார். தமிழக அரசின் செயல்பாடுகளை குறை கூறி வந்த நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி மற்றும் ஆட்சியாளர்கள் மீது ஊழல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad