Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் பணமதிப்பு இழப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கருப்புபட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

    பண மதிப்பு இழப்பு செய்யப்பட்டு இன்றுடன் 1 ஆண்டுகாலம் முடிவடைதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி நவ.8ம் தேதியை கருப்புதினமாக கடைபிடித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்;டுள்ளனர்.அதன்படி தூத்துக்குடி மாவட்டம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கடசி சார்பில்  கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு வடக்கு; பணமதிப்பு இழப்பினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். கோவில்பட்டி நகர தலைவர் சண்முகராஜ், வட்டார தலைவர்கள் ரமேஷ்மூர்த்தி, தேவசகாயம், செல்லத்துரை, சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் கருப்புபட்டை அணிந்து பணமதிப்பு இழப்புக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், வழக்கறிஞர் மகேஷ்குமார், சுப்பாராஜீலு, உமாசங்கர், மாவட்ட துணைத்தலைவர்கள் திருப்பதிராஜா, மதி, குணசேகரன், எஸ்.சி.பிரிவு மாவட்ட தலைவர் மாரிமுத்து, மகிளாகாங்கிரஸ் மாவட்ட தலைவி மாரியம்மாள், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி மற்றும் நகர,ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
                                                                                                               
                                                                                                                   இளசை மு.லெனின்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad