உளறிய அமைச்சர் ....திணறிய தொண்டர்கள் .....
உளறிய அமைச்சர் ....திணறிய தொண்டர்கள் .....
திண்டுக்கல்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக மன்மோகன் சிங் என்று உளறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக அமைச்சர்களும் நிர்வாகிகளும் பொது நிகழ்ச்சிகளிலும் மீடியாக்களிடமும் ஃபிரியாக வாய்க்கு வந்ததை பேசி வருகின்றனர். அவர்களின் பேச்சு பெரும்பாலும் சர்ச்ச்சையிலேயே முடிகிறது. குறிப்பாக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ஆர் பி உதயக்குமார் ஆகியோர் உளறுவதில் கிங்காக உள்ளனர். இவர்களின் பேச்சு சமூக வலைதளங்களில் மரண பங்கம் செய்யப்பட்டாளும் அமைச்சர்களின் உளறல் தொடர்ந்து கொண்டே உள்ளது.
டெங்கு தடுப்பு
இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார்.
மன்மோகன் சிங் என உளறல்
அண்மையில் மத்திய மருத்துவக் குழு தமிழகத்தில் டெங்கு குறித்து ஆய்வு செய்ததை அவர் நினைவு கூர்ந்தார். இதுதொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்ததை கூற முற்பட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக பிரதமர் மன்மோகன் சிங் என்று உளறினார்.
தவறை உணரவில்லை
தான் தவறாக கூறியதைக்கூட உணராமல் தொடர்ந்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்கொண்டே இருந்தார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் ஜெயலலிதா மருத்துவமனையில் இட்லி சாப்பிடவில்லை நாங்கள் அவரை பார்க்கவேயில்லை பொய் சொன்னோம் எனக் கூறி பீதியை கிளப்பினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
திண்டுக்கல்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக மன்மோகன் சிங் என்று உளறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக அமைச்சர்களும் நிர்வாகிகளும் பொது நிகழ்ச்சிகளிலும் மீடியாக்களிடமும் ஃபிரியாக வாய்க்கு வந்ததை பேசி வருகின்றனர். அவர்களின் பேச்சு பெரும்பாலும் சர்ச்ச்சையிலேயே முடிகிறது. குறிப்பாக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ஆர் பி உதயக்குமார் ஆகியோர் உளறுவதில் கிங்காக உள்ளனர். இவர்களின் பேச்சு சமூக வலைதளங்களில் மரண பங்கம் செய்யப்பட்டாளும் அமைச்சர்களின் உளறல் தொடர்ந்து கொண்டே உள்ளது.
டெங்கு தடுப்பு
இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார்.
மன்மோகன் சிங் என உளறல்
அண்மையில் மத்திய மருத்துவக் குழு தமிழகத்தில் டெங்கு குறித்து ஆய்வு செய்ததை அவர் நினைவு கூர்ந்தார். இதுதொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்ததை கூற முற்பட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக பிரதமர் மன்மோகன் சிங் என்று உளறினார்.
தவறை உணரவில்லை
தான் தவறாக கூறியதைக்கூட உணராமல் தொடர்ந்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்கொண்டே இருந்தார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் ஜெயலலிதா மருத்துவமனையில் இட்லி சாப்பிடவில்லை நாங்கள் அவரை பார்க்கவேயில்லை பொய் சொன்னோம் எனக் கூறி பீதியை கிளப்பினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
கருத்துகள் இல்லை