விரைவில் டிஜிட்டல்மயமாகும் உயர் நீதிமன்றங்கள் !
விரைவில் டிஜிட்டல்மயமாகும் உயர் நீதிமன்றங்கள் !
நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக டிஜிட்டம் மயமாக்கப்பட உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற டிஜிட்டல்மயமாக்க மையத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய உச்சநீதிமன்றத்தின் மின்னாளுகைக் குழுவின் தலைவர் நீதிபதி மதன் பி லோகூர், ஏற்கெனவே நான்கு உயர்நீதிமன்றங்கள் முழுதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன என்றும் இந்த ஆண்டு இறுதியில் அனைத்து உயர்நீதிமன்றங்களும் டிஜிட்டல்மயம் ஆகும் என்றும் தெரிவித்தார்.
இதன் மூலம் தினமும் 6 லட்சம் பக்கங்களுக்கு வழக்குகள் தொடர்பான விவரங்கள் இணையத்திலேயே கிடைக்கும் என்ற கூறிய அவர், அடுத்த கட்டமாக நீதிமன்ற ஸ்டாம்ப்களுக்கான கட்டணத்தையும் இணையம் மூலம் செலுத்துவது ஆன்லைன் மனுத்தாக்கல் போன்ற வசதிகளையும் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் கூறிப்பிட்டார்.
மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக அவர் கூறினார். நீதிமன்றங்களின் அனைத்து டிஜிட்டல் சேவைகள் குறித்த கையேடு ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற டிஜிட்டல்மயமாக்க மையத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய உச்சநீதிமன்றத்தின் மின்னாளுகைக் குழுவின் தலைவர் நீதிபதி மதன் பி லோகூர், ஏற்கெனவே நான்கு உயர்நீதிமன்றங்கள் முழுதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன என்றும் இந்த ஆண்டு இறுதியில் அனைத்து உயர்நீதிமன்றங்களும் டிஜிட்டல்மயம் ஆகும் என்றும் தெரிவித்தார்.
இதன் மூலம் தினமும் 6 லட்சம் பக்கங்களுக்கு வழக்குகள் தொடர்பான விவரங்கள் இணையத்திலேயே கிடைக்கும் என்ற கூறிய அவர், அடுத்த கட்டமாக நீதிமன்ற ஸ்டாம்ப்களுக்கான கட்டணத்தையும் இணையம் மூலம் செலுத்துவது ஆன்லைன் மனுத்தாக்கல் போன்ற வசதிகளையும் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் கூறிப்பிட்டார்.
மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக அவர் கூறினார். நீதிமன்றங்களின் அனைத்து டிஜிட்டல் சேவைகள் குறித்த கையேடு ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை