Header Ads

  • சற்று முன்

    எழும்பூரில் மாற்றுத்திறனாளிக்கு பேட்டரி காரை இயக்க மறுத்த கொடூரம்!

    எழும்பூரில் மாற்றுத்திறனாளிக்கு பேட்டரி காரை இயக்க மறுத்த கொடூரம்!


    disabledஎழும்பூர் ரயில் நிலையத்தில், ரயில் நிர்வாகம் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு பேட்டரி கார் வழங்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தீபக் நாதன் என்ற மாற்றுத்திறனாளி திருச்சி செல்வதற்காக மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்திருந்தார். ரயில் எழும்பூர் ரயில்நிலையத்தில் உள்ள 5வது நடைமேடையில் புறப்படத் தயாராக இருந்தது.

    இதையடுத்து, தீபக் பேட்டரி கார் சேவையை அளிக்கக் கோரியுள்ளார். ஆனால், ரயில் நிர்வாகம் 5வது நடைமேடையில் பேட்டரி காரை இயக்க முடியாது என மறுத்துவிட்டது.

    ஆனால், ரயில் நிர்வாகம் 5வது நடைமேடையில் பேட்டரி கார் இயக்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அப்படி இருக்கையில், தீபக் நாதனுக்கு பேட்டரி கார் சேவை மறுக்கப்பட்டது அனைவரையும் கோபமடையச் செய்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad