காஞ்சிபுரம் மண்டல 9-வது பேரவை கூட்டம் மேட்டுத்தெரு அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
காஞ்சிபுரம் மண்டல பேரவை கூட்டம் - 9 கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம்
காஞ்சிபுரம் மண்டல பேரவை கூட்டம் மேட்டுத்தெரு பஅருகே தனியார் திருமண மண்டபத்தில் தி ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் & டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்ஸ் ரிடையர்டு எம்ப்ளாயீஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் காஞ்சிபுரம் மண்டல 9-வது பேரவை கூட்டத்தில் காஞ்சிபுரம் மண்டல கௌரவ தலைவர் K.S. சம்பந்தம் தலைமையில் காஞ்சி மண்டல தலைவர் M.மனோகரன் துவக்கவுரையற்றினர் மாநில தலைவர் S. கிருஷ்ணன் நிறைவுரை ஆற்றினார் மாநில பொதுச்செயலாளர் P. செல்வராசன் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்
இக்கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கும் அரசே ஓய்வூதியம் வழங்க வேண்டும்,
அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்,மருத்துவப்படி ரூ.300 வழங்க வேண்டும், 120 மாத DA அகவிலைப்படி அரியர் நிலுவைத் தொகை உடனே வழங்க வேண்டும், 2026 ஏற்படக்கூடிய ஒப்பந்த பேரில் விரைவு ஒப்பந்தம் செய்து தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்க வேண்டும்,கல்வித்தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும்,ஓய்வுபெறும் போது பணிக்கொடை ரூ.20 லட்சத்தை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை