எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தமிழக முதல்வர் தீடிர் ஆய்வு
சென்னை எழும்பூர் மகப்பேறு அரசு மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தீடிர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருணராஜ் உடன் இருந்தனர்.
மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டவரிடம் குறைகளை கேட்டறிந்தார். போதுமான மருத்துவ உபகரணங்கள் உள்ளனவா என கேட்டறிந்தார்.
மேலும் குழந்தை பெற்ற தாய்மார்களிடம் மருத்துவர்கள் நன்றாக கவனிக்கிறார்களா போதுமான வசதிகள் உள்ளனவா மருத்துவ வசதி எப்படியுள்ளது . கழிவறை சுத்தமாக இருக்கிறதா மருந்து மாத்திரை தடையின்றி கிடைக்கிறதா என தாய்மார்களிடம் கேட்டறிந்தார். மருத்துவமனையில் லேபர் வார்டு சுத்தமாக சுகாதாரமாக இருக்கிறதா என பார்வையிட்டார்.






கருத்துகள் இல்லை