காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் குன்றத்தூர் ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை தனியார் மண்டபத்தில் குன்றத்தூர் ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், முன்னாள் எம்.எல்.ஏ., மதனந்தபுரம் கே.பழனி தலைமையில் நடைபெற்றது. அ தி மு க செய்தி தொடர்பு செயலாளர் பேராசிரியர் கல்யாண சுந்தரம், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆலோசனைகள் வழங்கினர்.
இதில், கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் ஒரத்தூர் என்.டி.சுந்தர், நகர செயலாளர் மாங்காடு எம்.பிரேம் சேகர், மாவட்ட பிரதிநிதி படப்பை ஆர்.மாரி, ஒன்றிய பாசறை செயலாளர் மாங்காடு பரத்ராஜ் , ஒன்றிய பொருளாளர் ந.மு.ஞானபிரகாஷ், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஆதனூர் சசிகுமார், பொதுக்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், நடுவீரப்பட்டு தீபன்ராஜ், ரகுவரன் உள்ளிட்ட அண்ணா திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை