காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவிலில் விஜய் பிறந்தநாளில் அமைச்சர் ரஞ்சித்குமார் குடும்பத்தினர் சார்பாக லட்சதீபம் ஏற்றப்பட்டது
காஞ்சிபுரம் மாவட்டம் தவேக சார்பில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும் வனத்துறை அமைச்சர்ருமான ஆர் வி. ரஞ்சித்குமார் அவர்களின் குடும்பத்தினர் சார்பாக அமைச்சரின் தாயார் ஜோதி அம்மாள் மற்றும் சகோதரர் ஆர் .வி. உதயகுமார் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நீடூடி வாழ கோவில் முழுவதும் லட்சதீபம் ஏற்றப்பட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு குடும்பத்துடன் வருகை தந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
இந்த நிகழ்வில் நத்தப்பேட்டை வேலு வழக்கறிஞர் வடிவேலு , மாமன்ற உறுப்பினர் ஷாலினி வேலு மற்றும் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.






கருத்துகள் இல்லை