காஞ்சிபுரம் ஓரிகை பணிமனை 1 வளாகத்தில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்!!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஓரிக்கை பணிமனை 1 வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர்
ச.ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்தநாள் முன்னிட்டு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை மற்றும் அர்ச்சனை செய்யப்பட்டு , பணிமனை ஒருங்கிணைப்பாளர்
எம்.ராமச்சந்திரன் , பி. மகேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
நிகழ்ச்சியில் ரவிக்குமார் ,வாசு, வினோத் ,விவேகானந்தன் ,தனசேகர் ,சத்யநாராயணன், ஆனந்தன், கண்ணன் மற்றும் தவேக கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை