விபத்தில் மூளைச்சாவடைந்த ஆந்திர இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது
ராணிப்பேட்டைமாவட்டம்,ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனையில் கடந்த 26 ஆம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூர் பொம்ம சமுத்திரம் அருகே இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற லிக்கி பிரபாஸ் என்ற 22 வயது இளைஞர் சாலையின் தடுப்புகளில் இருசக்கர வாகனம் மோதி படுகாயமடைந்தார் அவரை உறவினர்கள் ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர் இந்த நிலையில் லிக்கி பிரபாஸுக்கு மூளை சாவு ஏற்பட்டது இதனை அடுத்து அவரின் உறவினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்ததை அடுத்து சிறுநீரகம் ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சென்னை காவேரி மருத்துவமனைக்கும்,கல்லீரல் ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனைக்கும்,கண்கள் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது






கருத்துகள் இல்லை