• சற்று முன்

    காஞ்சிபுரம் மா👌வட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் அவர்களின் 109 வது பிறந்தநாள் விழா மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

     


    காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் அவர்களின் 109 வது பிறந்தநாள் விழா மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஓரிக்கை அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுக செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகை செல்வன் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகைசெல்வன்,


    திரைத்துறையில் பொதுவானவர்களை அரசு நிகழ்ச்சிக்கு வற்புறுத்தி கட்டாயப்படுத்தி வருகை தர வைத்து அரசு சாதனைகளை பேச வற்புறுத்தி உள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 

    10 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்குவதாக கூறி 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே கண் துடைப்புக்கு லேப்டாப் வழங்கியுள்ளனர், 

    பராசக்தி படத்தில் வசனம் எழுதி பிழைத்த கருணாநிதி, தற்பொழுது குடும்ப அரசியல் வளர்ச்சி காரணமாக அவரின் பேரன் புதிய பராசக்தி படத்தை இன்பநிதி வெளியிடுகிறார், அந்த அளவிற்கு குடும்ப ஆட்சி வளர்ச்சி காரணத்தை காட்டுகிறது, மேலும் மீண்டும் கனிமொழியை மாநில அரசியலில் ஈடுபட நினைத்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்,

    செங்கோட்டையன் ஒரு காலாவதியான மாத்திரை அது முடிந்து போன ஒன்று, இவர்கள் போன்றவர் செல்வாக்கை இழந்தவர்கள் எல்லோரும் தவெக்கவிற்கு செல்வதால் அந்த கட்சியும் வளராது, அதிமுகவிற்கும் எந்த சேதாரமும் கிடையாது, நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தி இருக்க வேண்டும்,

    மத மோதலை ஏற்படுத்த நினைக்கிறது இந்த திராவிட மாடல அரசு, அனைவருக்கும் ஒன்றான அரசாக திமுக அரசு செயல்படுவதில்லை, தேர்தலுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் பொங்கலுக்கு குடும்ப அட்டைக்கு ரூ.3000 வழங்கியுள்ளனர் இது தேர்தலுக்கு எடுபடாது என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வளர்ச்சி  கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர், அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad