• சற்று முன்

    மகாத்மா காந்தி பெயரிலான நூறு நாள் வேலைத் திட்ட பெயரை மாற்றிய பாஜக அரசைக் கண்டித்து மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு மனு அளிக்கும் நூதன போராட்டம்....

    கடந்த 2006 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைவர் அன்னை சோனியா காந்தி  அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், முன்னாள் பாரதப் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்  அவர்களால் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் (MGNREGA) பெயரை மத்திய பாஜக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விக்சித் பாரத் கியாரண்டி பார்  ரோஜ்கர் அன்ட் அஜ்விகா கிராமின் VIKSIT BHARAT GUARANTEE FOR ROZGAR AND AJEEVIKA MISSION GRAMIN ( VB G RAM G) என்று பெயர் மாற்றம் செய்திடவும், அந்தத் திட்டத்தின் பங்களிப்பை மத்திய அரசு 60%  மாநில அரசு 40% தர வேண்டுமென நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மசோதா கொண்டு வந்துள்ளது. அதை கண்டிக்கின்ற வகையிலும், தேசத் தந்தை மகாத்மா காந்தி பெயரிலான திட்டத்தின் பெயரை மாற்றுவதை உடனடியாக கைவிடக் கோரியும வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்  குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 


    நிகழ்விற்கு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் எம்பி தலைவர் சுரேஷ்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் திருமதி. தேவயானி ராஜேந்திரன், நீலகண்டன், காமராஜ், பாஸ்கரன், சரவணன், இர்ஷாத் அஹமத், உவைஸ் அஹ்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி  தலைவர் வீராங்கன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வில் மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலை திட்ட பெயரை மாற்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. நகர துணைத் தலைவர்  அசோகன், மாவட்ட பொதுச் செயலாளர் பாரத். நவீன்குமார், வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் திருமதி. கிருஷ்ணவேணி ஜலந்தர்  ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்வில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ,சா.சங்கர், விஜயகுமார், நித்தியானந்தம், தாண்டவமூர்த்தி, கே.வி குப்பம் மேற்கு வட்டார பொறுப்பாளர் பாபு, பள்ளிகொண்டா பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அக்பர் பாஷா, மற்றும் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம்,  மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் ராகேஷ், மாநில RGPRS துணை தலைவர் ராஜசேகரன், மாநில எஸ்ஸி பிரிவு பொதுச் செயலாளர்கள் சுப்பிரமணி, சுரேஷ் மாநில ஓபிசி பிரிவு பொதுச் செயலாளர் சுனில், கேவி குப்பம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ஜெகந்நாத ரெட்டி, பள்ளிகொண்டா பேரூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிக்கந்தர் பாஷா மற்றும் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, பன்னீர்செல்வம், ரஜினிகாந்த், உமாபதி, ஆடிட்டர் இர்ஃபான், அஸ்கர் அலி, விநாயகம், கன்னியப்பன், குமாரசாமி, முனுசாமி, வெங்கடேசன், நாகேஸ்வரன், ஜெயகோபி, ராஜேஷ் , மனோகரன்,  விஜய்காந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் விஜயேந்திரன் நன்றியுரை கூறினார்

    நிகழ்ச்சியின் நிறைவில் மகாத்மா காந்தி அடிகளின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மனு அளித்து நூதன போராட்டம் நடத்தப்பட்டது 


    மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad