• சற்று முன்

    கின்னஸ் சாதனை எடுத்துவந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்ற காஞ்சிபுரம் வீரர்

    காஞ்சிபுரத்தில் தொடர்ச்சியாக ஆறு மணி 35 நிமிட நேரத்துக்கு ஹாக்கி மட்டையை செங்குத்தாக நேர் நிறுத்தி அதனை சமநிலைப்படுத்தி உலக சாதனை செய்த காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் சாதனை எடுத்துவந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றார்

    காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்   அருண்குமார். (39) இவர் ஸ்டேட் பேங்க் பணியாளர் பணியாற்றி வருகிறார். விளையாட்டின் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் விளையாட்டு முக்கியத்துவத்தை அனைவரும் உணரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கடந்த 2019 முதல் தற்போது 2024 வரை 642 கிராம் எடை உடைய ஹாக்கி மட்டையை செங்குத்தாக நேர் நிறுத்தி சமநிலையில் தொடர்ச்சியாக ஆறு மணி நேரத்திற்கு மேலாக நிலை நிறுத்தும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

    இதனைத் தொடர்ந்து ஏற்கனவே உள்ள கின்னஸ் உலக சாதனையான 6 மணி நேரம் ஐந்து நிமிடம் என்ற சாதனையை முறியடிக்கும் முயற்சியில், கடந்த ஆண்டு மே மாதம் அறிஞர் அண்ணா விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இறகு பந்து விளையாட்டு அரங்கில் தனது சாதனை முயற்சியை நடத்தி முடித்தார்,

    தொடர்ந்து தனது நிலையை தொடர்ச்சியாக சமன்படுத்தி இறுதியாக 6 மணி நேரம் 35 நிமிடங்கள் தொடர்ந்து நிலை நிறுத்தி புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

    ஏற்கனவே இவர் லிம்கா சாதனை புத்தகத்தில் இதே முயற்சியில் ஈடுபடுத்தி 2மணி 45 நிமிடங்கள் நிலைநிறுத்தி தன் சாதனையை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் கண்காணிப்பாளர்களின் பரிந்துரை உள்ளிட்டவைகள் கின்னஸ் உலக சாதனை புத்தக நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் சரிபார்ப்புகள் முழுவதும் நிறைவு பெற்றவுடன் உலக சாதனையை கடந்த ஜனவரி மாதம் முடிவு செய்யப்பட்டு கின்னஸ் உலக சாதனை கடந்த மாதம் அனுப்பி வைத்து அந்த சாதனையை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


    செய்தியாளர் : திணேஷ் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad