இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் துண்டு பிரசுரங்கள் விநியோகம்!
கல்லூரணி ஊராட்சி பாவூர்சத்திரம் பாகம் எண்138 ல் பாகப் பொறுப்பாளர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ் தலைமையிலும்,ஒன்றிய கழகச் செயலாளர் சீனித்துரை, கிளைக் கழகச் செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் வீடு வீடாகச் சென்று தலைமைக் கழகத்தால் வழங்கப்பட்ட நோட்டீஸ் வழங்கி கழக அரசால் நிறைவேற்றப்பட்டிருக்கிற திட்டங்களை விளக்கியும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கிறதா? உங்களுக்கு இன்னும் என்ன தேவை இருக்கிறது என்பதை கேட்டு திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பெரியார் திலீபன் என்ற கோபால்சாமி, முன்னாள் பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கவின் தேவதாஸ், ஒன்றிய இளைஞர் அணி ஹரி கிருஷ்ணன், தங்கப்பாண்டியன், தனக்குமார், குறும்பல பேரி டால்டன், பால்கனி குரு சிங், பாஸ்கர், வி. ஏ. நகர் கணேசன், வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன் ,ஆனந்த் உள்ளிட்ட கழக நிர்வாகிகளுடன் சென்று கழக அரசின் சாதனை துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை