• சற்று முன்

    கோவில்பட்டி அருகே கந்துவட்டியால் தூக்கிட்டு தற்கொலை - ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை..



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கரடிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன் கூலித் தொழிலாளி இவரது மனைவி பேச்சியம்மாள் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. கதிரவன் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு கழுகுமலை ஆறுமுக நகரை சேர்ந்த நடராஜன மனைவி மாணிக்கம் என்பவரிடம் 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    கதிரவன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல் தவணையாக 5 ஆயிரம்  பின்னர் 3 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் மாணிக்கம் கதிரவனிடம்  16 ஆயிரம் ரூபாய் கொடுத்து உனது கணக்கை சரி செய்து கொள்ள என கூறியதாக கூறப்படுகிறது இந்நிலையில்  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  கதிரவன் ஊருக்குச் சென்ற நடராஜன் கதிர்வனிடம் பணத்தை ஒழுங்காக கொடுத்து விடு என மிரட்டல் விடுத்துள்ளார் இதனால் மன வேதனையில் இருந்த கதிரவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கழுகுமலை போலீசார் கதிரவன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் கூறு ஆய்வுக்கு பின்னர் கதிரவன் உடல் உறவினரிடம்  ஒப்படைக்கப்பட்டது.

    கரடிகுளம் கிராமத்தில் உள்ள உறவினர்கள் மிகவும்  சோகத்துக்கு உள்ளாகினர்.இச்சம்பவம் தொடர்பாக கழுகுமலை போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து நடராஜனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad