கோவில்பட்டி அருகே வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்து முகாமை பார்வையிட்டார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு கிராமத்தில் உள்ள செண்பகராஜன் துவக்கப் பள்ளியில் கோவில்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.. இம் முகாமில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார் மேலும் இம் முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு வருமுன் காப்போம் திட்டம் அடையாள அட்டை வழங்கினார்..
இலவச மருத்துவ முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை இ.சி.ஜி பரிசோதனை, ஸ்கேன், காது,மூக்கு ,தொண்டை மருத்துவம் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது மேலும் உயர்ரக சிகிச்சைக்கு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரையும் செய்யப்பட்டது மேலும் ஊட்டச்சத்து மிக்க தானிய வகைகள் காய்கறி பழங்கள் உள்ளிட்டவை கண்காட்சி இடம்பெற்று இருந்தது. இம் முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் உமா செல்வி வில்லிசேரி மருத்துவ அலுவலர் வனிதா, மற்றும் ஆரம்ப சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை