Header Ads

  • சற்று முன்

    விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம் மீண்டும் குலக்கல்வி முறையை புகுத்த பாஜக அரசு முயற்சிக்கிறது - திராவிட கழக தலைவர் கி.வீரமணி குற்றச்சாட்டு



    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் திராவிட கழகத்தின் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக, தலைவர் கி. வீரமணி பங்கேற்று பேசுகையில், இந்திய பாராளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு என ஒன்றிய அரசு கூறுவதை நிறைவேற்ற முயற்சிக்காது எனவும், வடிவேலு நகைச்சுவையை போல மகளிர் இடஒதுக்கீடு வரும் ஆனால் வராது என நகைச்சுவையாக விமர்சித்தார்.

    சாதிவாரி கணக்கெடுப்பு என்பது உடலில் தடுப்பூசி செலுத்துவதை போல எனவும், அப்போது தான் சாதிய பிரிவுகளின் அடிப்படையில் உள்ள ஏற்ற தாழ்வுகளை களைத்து சமூகநீதியை நிலைநாட்ட முடியும் என தெரிவித்தார். மகளிர் சம உரிமையை பாதுகாப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்மாதிரியாக உள்ளதாகவும், அதனால் தான் மகளிர் உரிமைத்தொகை எனும் திட்டத்தை கொண்டு வந்து அவர்களின் இல்லத்திற்கே சென்று வழங்கப்படுவதாகவும் கூறினார். 

    விஸ்வகர்மா யோஜனா' என்ற ஒன்றிய அரசின் திட்டம் என்பது மீண்டும் குலக்கல்வி முறையை கொண்டு வரும் முயற்சி எனவும், அதை ஒன்றிய அரசு உள்நோக்கத்துடன் கொண்டு வருவதாகவும், அதற்கு பாரம்பரிய தொழில் என புதிய பெயரை வைத்து கொண்டு வந்துள்ளதாகவும், இது போல உள்நோக்கத்துடன் செயல்படுவதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டம் என குற்றஞ்சாட்டினார். சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த ஆளுநர் தமிழகத்தில் தான் உள்ளார் என கூறிய அவர், சாதாரண நிகழ்வுகளை கூட பெரிதாக்கி சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டதாக குற்றம்சாட்ட ஒன்றிய அரசு முயற்சிப்பதாகவும், மணிப்பூர் கலவரம் உட்பட பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நல்ல நிலையில் உள்ளதாக கூறினார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை கொண்டு வந்து அதில் பித்தலாட்டம் செய்து ஜெயித்து விட்டால் அது தான் நாட்டில் நடைபெறும் கடை தேர்தலாக இருக்கும் எனவும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என கூறி உரையை நிறைவு செய்தார் 


    சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad