திண்டுக்கல்: கால்வாயில் சடலம்... அதிர்ச்சியில் மக்கள்!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ராமநாதன் நகரில் இருக்கும் சாலையோர கால்வாயில் வாலிபரின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் பழனி அடிவாரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (22) என்பது தெரியவந்தது. அவர் விபத்தல் சிக்கி இறந்தாரா அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் செய்தியாளர் : பாலமுரளி
கருத்துகள் இல்லை