சமூகநலத்துறை அமைச்சரின் இந்த துரித நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டு
தூத்துக்குடியில் ஆதரவற்ற பாட்டி ஒருவரை தகவல் கிடைக்கப்பெற்ற சில நிமிடங்களில் இல்லத்தில் கொண்டு சேர்த்த சமூகநலத்துறை.. பொதுமக்கள் பாராட்டு.!
தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகே ஆதரவற்ற பாட்டி ஒருவர் அங்கு வருவோர் போவோரிடம் கையேந்தியவாறு அமர்ந்திருப்பதாக வாட்சப் குழுமம் ஒன்றில் ஒருவர் செய்தியை பகிர்ந்து, சமூகநலத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்தத் தகவல் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. கீதாஜீவன் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. சென்னையில் இருந்த அவர் உடனடியாக அந்தப் பாட்டியை இல்லத்தில் கொண்டு சேர்க்குமாறு உத்தரவிட்டார். தகவல் கிடைக்கப்பெற்ற சில நிமிடங்களிலேயே அந்தப் பாட்டி தூத்துக்குடி பாசக்கரங்கள் இல்லத்தில் கொண்டு சேர்க்கப்பட்டார். சமூகநலத்துறை அமைச்சரின் இந்த துரித நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.
செய்தியாளர் : லெனின்
கருத்துகள் இல்லை