Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் பாஜகவினர் கண்டித்து- அதிமுகவினர் சாலையில் நின்று போராட்டம்


    கோவில்பட்டியில் பாஜகவினர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து போராட்டம் நடத்திய பாஜகவினரை கண்டித்து- அதிமுகவினர் சாலையில் நின்று போராட்டம்..

    பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த ஐ.டி விங்க் தலைவர் நிர்மல் குமார் மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறு பேசிய விட்டு சென்று உள்ளதாகவும்  கூட்டணி தர்மத்தை மீறி எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இணைத்து கொண்டதாகவும்  கூறி தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரௌடி தலைமையில் பாஜகவினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டியும் உருவப்படத்தை எரித்தும் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய பாஜகவினர் 4  பேரை காவல்துறையினர் கைது செய்த இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் இன மணியாச்சி சாலையில் ஒட்டப்பட்ட போஸ்டரை அதிமுகவினர் கிழித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். இருந்த போதிலும் இருவதற்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலையோரமாக நின்று உருவப்படத்தை எரித்த பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad