ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈ.வி. கே.எஸ். இளங்கோவன் வெற்றி: வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈ .வி .கே. எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றதை தொடர்ந்து வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் எதிரே மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் டீக்காராமன் தலைமையில் காங்கிரஸார் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் கதிர்வேல் , எஸ்.சி. எஸ்.டி. பொதுச் செயலாளர் பொறியாளர் சித்திரஞ்சன் ,மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் வாஹித் பாஷா ,மண்டல தலைவர் அசோக் குமார், மாவட்ட எசி.எஸ்டி .தலைவர் தங்கமணி ஓ.பி.சி. செயலாளர் காட்பாடி கே.எஸ்.ரவி, கப்பல் மணி, துளசிராமன், கஸ்பா கணேஷ் , ஆட்டோ தொழிற்சங்க தலைவர் முனியப்பன், மத்திய மாவட்ட செயலாளர் காஞ்சனா, பிச்சமுத்து மற்றும் மாவட்ட ,நகர ஒன்றிய காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட நிருபர்: S.சுதாகர்
கருத்துகள் இல்லை