Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே தனியார் காற்றாலை நிறுவனம் உயர் மின்னழுத்த கம்பங்கள் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்..


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் காற்றாலை நிறுவனம் JSW  சார்பில் பல்வேறு இடங்களில் காற்றாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவில்பட்டி அருகே 

    கே. குமரெட்டையாபுரம் கிராமத்தில் காற்றாலை  அமைக்கும் பணிக்காக குடியிருப்பு பகுதிகள் மற்றும் கோவில் வழியாக  உயர் அழுத்த மின்கம்பங்கள் உயர் மின்னழுத்த கம்பிகள்  கொண்டு செல்வதற்காக மின்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.. இப்பணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தடுத்து நிறுத்தி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விரட்டி அடித்தனர்... இந்நிலையில் இன்று காற்றாலை நிறுவனம், உரிய நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கிராம பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad