Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் டயர் ரீட்டிரேடிங் கம்பெனியில் திடீர் தீ விபத்து


    பல லட்சம் மதிப்பிலான கனரக வாகனங்களின் டயர்கள் தீயில் எரிந்து நாசம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே கணேஷ் என்பவருக்கு சொந்தமான விஷ்ணு டயர் ரீட்டிரேடிங் கம்பெனி செயல்பட்டு வருகிறது. 


    இன்று வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் இருந்த போது கம்பெனியின் வெளிப்புறத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனங்களின் டயர்களில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் 300-க்கும் மேற்பட்ட டயர்களில் தீ மள மளவென பரவியது. இதனால் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கரும்புகை அப்பகுதியை சூழ்ந்தது. தகவல் அறிந்து கோவில்பட்டி தீயணைப்பு தீயணைப்பு துறை நிலை அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனத்தில் வருகை தந்து தீ கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பல லட்சம் மதிப்பிலான டயர்கள் எரிந்து நாசம் இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad