Header Ads

  • சற்று முன்

    மதுரை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைத்தெப்ப திருவிழா


    மதுரை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைத்தெப்ப திருவிழாவை முன்னிட்டு சிகர நிகழ்வாக தெப்பத்தில் உள்ள மிதவை தேரில் மின்னொளியில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பு

    மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெப்ப திருவிழா விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், பச்சைக் குதிரை வாகனம் வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


    விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று வைரத்தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தெப்பத் திருவிழா இன்று காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 7.30 மணியளவில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர். சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிம்மாசனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக ஜிஎஸ்டி சாலையில் உள்ள நகரத்தார் மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் காலை 11 மணியளவில் தெப்பக்குளத்தில்  எழுந்தருளினார். அங்கு அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்த தெப்பத்தேரில்(மிதவை) தெய்வானையுடன், சுப்பிரமணியசுவாமி அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதையடுத்து காலை 11 மணியளவில் இங்கு கூடியிருந்த பக்தர்கள் தெப்பத்தேரில் இணைக்கப்பட்டிருந்த வடத்தை பிடித்து இழுத்து தெப்பக்குளத்தின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி 3 முறை வலம் வந்தனர்.  இந்த நிலையில் தற்போது தெப்பகுளத்த்தின் மைய மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டு பின்னர் தெப்பத்தினை மூன்று முறை சுற்றி வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வான வேடிக்கைகளும் இசை கச்சேரிகளும் நடைபெறும். பின்னர் மேளதாளங்கள் முழங்கதங்கக் குதிரை வாகனத்தில் சுப்பிரமணியிசுவாமி எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வலம் வந்து சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad