திருமங்கலம் அருகே 108 சன்னதியில் பிரத்யங்கிரா தேவிக்கு நெருப்புக் குண்டத்தில் மிளகாய் போட்டு பக்தர்கள் தரிசனம்
திருமங்கலம் அருகே 108 சன்னதியில் கொண்ட திருக்கோயிலில் நடைபெற்ற மிளகாய் யாகத்தில் பக்தர்கள் தரிசனம் - தை அமாவாசை தினத்தன்று பிரத்யங்கிரா தேவிக்கு நெருப்புக் குண்டத்தில் மிளகாய் போட்டு, பித்ரு தோஷம் நீங்க பக்தர்கள் தரிசனம். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ராயபாளையம் கிராமத்தில் உள்ள 108 சன்னதியில் கொண்ட முக்கி நிலையத் திருக்கோயிலில், தை அமாவாசை தினமான இன்று பித்ரு தோஷம் நீங்க , பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது .
இந்த யாகசாலையில் நெருப்புக் குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் மிளகாய் வற்றலை போட்டு , பித்ரு தோஷம் நீங்க அம்மனை வழிபட்டனர். அமாவாசை தினமான இன்று இந்த யாக சாலையில் , மிளகாய் வத்தல், வெண்பூசணி போன்றவற்றை நெருப்புக்குண்டத்தில் போட்டு வழிபட்டால், நம்முடைய முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய்வதற்கு சமமாகவும், நம் வாரிசுகள் தோஷமின்றி வாழவும், பித்ருதோஷம் நீங்கும் எனவும் கூறப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை