புத்தாண்டு தினத்தன்று கோவை அரசு மருத்துவமனையில் 20 குழந்தைகள் பிறந்தன.
கோவை அரசு மருத்துவமனையில் ஆண்டுதோறும், 7,000க்கும் அதிகமான பிரசவங்கள் நடக்கின்றன. இதில், 60 சதவீதம் சுகப்பிரசவமாகவும், 40 சதவீதம் சிசேரியன் முறையிலும் பிறக்கின்றன. ஆங்கிலப் புத்தாண்டான நேற்று, கோவை அரசு மருத்துவமனையில், நள்ளிரவு 12:01 முதல், மதியம் வரை தலா 10 ஆண், பெண் குழந்தைகள் என, 20 குழந்தைகள் பிறந்தன.
இவற்றில், 10 குழந்தைகள் சுகப்பிரசவம் மூலமும், மீதி 10 குழந்தைகள் அறுவை சிகிச்சை முறையிலும் பிறந்தன.புத்தாண்டில் பிறந்த குழந்தைகள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்தார்.
கோவை மாவட்ட நிருபர் : அக்கினிபுத்திரன்
கருத்துகள் இல்லை