Header Ads

  • சற்று முன்

    சிவகாசி சிவன் கோவிலில், தை மாத தேய்பிறை பிரதோஷம் சிறப்பு பூஜைகள்


    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்திபெற்ற சிவன் கோவிலில், இன்று தை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமிக்கும், ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஸ்ரீவிஸ்வநாதர் சன்னதி முன்புள்ள ஸ்ரீநந்தீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது. தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று மாலை, பிரதோஷ காலத்தில் ஸ்ரீநந்தீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும். பின்னர் ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மனுடன் பல்லக்கில் எழுந்தருளி கோவில் வளாகத்திற்குள் வலம் வந்து பிரதோஷ காட்சி கொடுப்பார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad