மதுரை விமான நிலையத்திற்குள் (ஏர் கன்) எனப்படும் பொம்மை துப்பாக்கி கொண்டு வந்த வாலிபரிடம் போலீஸார் விசாரணை
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக இன்று காலை 9 மணி அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் நிர்மல் பிரபு (வயது 26 )என்ற வாலிபர் உடமையை சோதிக்கும் போது ஏர்கன் எனப்படும் பொம்மை துப்பாக்கியை கொண்டு வந்தது தெரிய வந்தது இதனை அடுத்து மத்திய தொழில் காப்பு படை வீரர்கள் மற்றும் அவனியாபுரம் புர காவல் போலீசார் அவரிடம் விசாரணை செய்து வந்தனர். தவறுதலாக பயண அவசரத்தில் கொண்டு வந்ததாக நிர்மல் பிரபு எடுத்து கூறி போலீசார் அவரிடம் விசாரணை செய்து பின்னர் விடுதலை செய்தனர். விமான நிலையத்திற்குள் திடீரென ஏர்கன் துப்பாக்கியுடன்
மதுரை விமான நிலையத்தில்வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில் சோதனையில் சிக்கிய வாலிபர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை