Header Ads

  • சற்று முன்

    வேலூர் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது

    வேலூர் மாவட்டம், வேலூர் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது இதில் மாநில தேர்தல் ஆணையர்களாக கே. ஜெயராமன் ,டி.கே புரந்தரன், கே .செல்வராசு, டி. பாண்டியன் ,ஆகியோர் செயல்பட்டு தேர்தலை நடத்தினார்கள். தேர்தலின் முடிவில் மாநில பொதுச் செயலாளராக 9-வது முறையாக. சி. சேகர்,தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ,மேலும் மாநில தலைவராக டி .கே. ரமேஷ் பாபு ,மாநில பொருளாளராக வி .முருகன் ,மாநில பிரச்சார செயலாளர்களும், மாநில தலைமை நிலைய செயலாளர்களும், மாநில அமைப்பு செயலாளர்கள் ,மாநில இணை செயலாளர்,ஆகியோர் ஏகமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதியத்தினைை (CPS)-ஐ ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையினைைை நடைமுறைப்படுத்த  வேண்டும் அரசு பள்ளிகளில் குறிப்பாக தொடக்கக்கல்வித்துறையில் மாணவர்கள் அதிகமாக சேர்க்கைை நடைபெற்று இருப்பதால் அதற்கேற்றவாறு ஆசிரியர் மாணவர் விகிதாச்சார கணக்கெடுப்பு எடுத்து உடனடியாக ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுடைய கல்வி நலனை பாதுகாத்திட வேண்டும். அலகு விட்டு  அலகு சென்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நடுநிலை பள்ளிகளில் காலியாக இருப்பதால் அந்த பணியிடத்தை கலந்தாய்வு மூலம் உடனடியாக நியமித்திட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

    வேலூர் மாவட்ட நிருபர் : S.சுதாகர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad