Header Ads

  • சற்று முன்

    ஆட்சிக்கு வந்து ஒன்றை ஆண்டு ஆகிறது ஒரு ஆட்சி ஐந்தாண்டுகள் கண்டிப்பாக செய்வார் என கூறினார் . அமைச்சர் கீதாஜீவன் பேச்சு..


    அண்ணாமலை அரசியலுக்கு வந்து ஒரு வருடம் தான் ஆகிறது ஆனால் இவருக்கு கொடுத்த வேலை ஐபிஎஸ் வேலையை செய்ய முடியாமல் அரசியலுக்கு வந்தவர்தான் என கோவில்பட்டியில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் பேச்சு..

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திமுக நகர கழக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் கிருஷ்ணன்கோவில் திடலில் நடைபெற்றது.நகரச் செயலாளர் கருணாநிதி தலைமையில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    அப்பொழுது பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் :

    தமிழ் மொழிக்காகவும் தமிழும் மக்களுக்காகவும் ஆட்சி புரியக்கூடியவராக தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளார். அதனால்தான் இந்தியா டுடே பத்திரிக்கை இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம்  செயல்படுவதாக சுட்டிக்காட்டி உள்ளனர் இதுவே தமிழக முதல்வரின் செயல்பாடுகள் சாட்சி பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு மேடையில் தமிழக முதல்வர் ரயிலில் பயணம் செய்கிறார் என ஆனால் அவர் தலைவர் பிரதமர் மோடி தனி விமானத்தில் செல்வதை கூற மாட்டார் என்ன இதில் பித்தலாட்ட தனம் ஊர் ஊருக்கு பொய்ய சொல்லி வருகிறார் இவர் அரசியலுக்கு வந்து ஒரு வருடம் தான் ஆகிறது ஆனால் இவருக்கு கொடுத்த வேலை ஐபிஎஸ் வேலையை செய்ய முடியாமல் அரசியலுக்கு வந்தவர்தான் நாட்டுக்காக பயிற்சி கொடுத்து அங்கே வேலை செய்ய சொன்னார் இங்கே வந்திருக்கிறார் அவர் அரசியல் கொண்டு ஒரு வருடம் ஆகிறது நான் அரசியலுக்கு வந்து 26 வருடம் ஆகிறது ஒரே கொள்கை பிடிப்புடன் திமுகவில் இருக்கிறோம் எல்லாம் கற்பனையாக கூறி வருகிறார் ஒரு நல்ல கதை எழுதலாம் புத்தகம் விற்பனையாகும் ஆனா பொய்யை எழுதினால் மைக்ல பேசினால் நாங்க காதல் பூ வைத்துக்கொண்டு அலையவில்லை இது பெரியாரால் பண்பட்ட பொண்ணு அண்ணாவால் சீரமைக்கப்பட்டு மண் கலைஞரால் வளர்க்கப்பட்ட மண் நாங்க தமிழர்களால் ஒருங்கிணைந்து இருக்கிறோம் சனாதனத்திற்கு சமஸ்கிருதம் படித்தால் தான் டாக்டராக முடியும்  என்ற நிலையை முறியடித்திருக்கிறோம்.  இங்கு சனாதனம் பேசும் இவர்கள் இவர்களால் தான் ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் யாரும் கோவிலுக்கு போக முடியாத நிலைமையும் மேல்படிக்கும் படிக்கும் முடியாத நிலையில் இருந்தது அதை முறியடித்து இருக்கிறோம். இவர்கள் சராதானத்தை பற்றி பேசுகிறார்கள் ஜாதி மதத்தை பிளவுபடுத்தி நோட்டாவை விட கூட ஓட்டு வாங்குவதற்காக செய்கின்றனர். முட்டையை பத்தி பேசுகிறார் ஏற்கனவே இதைப்பற்றி நான் கூறியுள்ளேன் வாகனங்களில் வரும் போது ஒரு சில முட்டை டேமேஜ் ஆவது வழக்கம் அந்த முட்டையை மாணவர்களுக்கு வழங்குவதில்லை அதை தனியாக எடுத்து வைத்து மாற்று மூட்டை வாங்கி விநியோகிக்கப்படும் இதை பாஜகவினர் வேண்டுமென்றே போட்டோ எடுத்து அதை பரப்பி வருகின்றனர் இதை வைத்துக்கொண்டு அண்ணாமலை அரசியல் செய்கிறார் இதோடு அவர் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அவர் பேசும் மேடையில் ஏறி நாங்கள் பேச வேண்டி வரும்  எம் பின்னாடி நான் ஓடுவதாக கூறுகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை ஓடுவது தப்பா வேலை செய்வது தப்பா இல்லை பெண் என்பதால் கூறுகிறாரா  மகளிர் உரிமைத்தொகை பற்றி பேசுகிறார் எடப்பாடி பழனிச்சாமி கண்டிப்பாக நாங்கள் செய்வோம் எங்கள் தலைவர் செய்வார். இப்போதுதான் ஆட்சிக்கு வந்து ஒன்றை ஆண்டு ஆகிறது ஒரு ஆட்சி ஐந்தாண்டுகள் கண்டிப்பாக செய்வார் என கூறினார் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad