கோவில்பட்டி தனியார் திருமண மடத்தில் வைத்து கிறிஸ்மஸ் பெருவிழா நடைபெற்றது அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்பு
ஐக்கிய கிறிஸ்தவ பேரவை ஷெக்கினா இசை பள்ளி, அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் கிறிஸ்மஸ் பெருவிழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
ஐக்கிய கிறிஸ்தவ பேரவை ஷெக்கினா இசை பள்ளி, அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் திருமண மடத்தில் வைத்து கிறிஸ்மஸ் பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோயில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அழகர்சாமி, பழனி குமார், ராமமூர்த்தி, கோபி, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை