Header Ads

  • சற்று முன்

    மதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை


    கஞ்சா, பீடி கட்டுகள், செல்போன் பறிமுதல் மதுரை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர்.  இந்தநிலையில், கைதிகளிடம் செல்போன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து மதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மூன்று போலீஸ் உதவி கமிஷனர் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தனித்தனி குழுவாக பிரிந்து சென்று ஒவ்வொரு அறைகளில் உள்ள கைதிகளிடம் மற்றும் கைதிகளின் அறைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.  மேலும் அங்குள்ள சமையல் அறை, குளியல் அறை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.  சில கைதிகள் மறைத்து வைத்திருந்த கஞ்சா, பீடி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது இதேபோன்று பெண் கைதிகளின் அறைகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    நேற்று தண்டனை கைதிகள் சிலர் கஞ்சா பொட்டலங்களை  மறைத்து சிறைக்குள் கொண்டுவந்து விசாரணை நடத்திய நிலையில் இன்று இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

    செய்தியாளர்  வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad